Quantcast
Channel: Warrior
Viewing all articles
Browse latest Browse all 254

அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...

$
0
0


இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப்  போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள்.  இப்போது ஜெயலலிதா செய்ததால்  சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும்,  இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்..

தமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன.

என்ன அநியாயம் இது...?

ஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங்கையர்கள் விளையாட வருவார்கள் என்று சொல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமாட்டேன் என்றும் சொல்லி விட்டார்...., இப்படி எல்லா விதத்திலும் ஈழப்பிரச்சினையில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தம்பிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துதானே போகின்றது...?

குறைந்த பட்சம் யாரேனும் ஒரு அமைச்சரை அனுப்பி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதியைக் கொடுத்து சூழலை சரி செய்யாமல்.....பாசிச பற்களைக் கொண்டு போராடிய இளையர்களை கடித்துக் குதறியது எந்த விதத்தில் நியாயம்..? உண்ணாவிரதம் என்பது மகாத்மா காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த சத்திய வழிமுறை, அதை ஆங்கிலேயர்களே மிகக்கண்ணியமாக கருதி மகாத்மாவின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்....

அந்தப்  புனிதரை தேசப்பிதாவாக கொண்ட நம் தேசத்தில் ஒரு நேர்மையான போராட்டத்தை இப்படித்தான் முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அடக்குவதா? 

ஈழத்தைப் பற்றி பேசியதற்காகவே ஒரு வருடத்திற்கும் மேலாக வைகோவை பொடாவில் அடைத்து வைத்திருந்ததையும் மக்கள் மறக்கவில்லை, ஈழத்தை கடுமையாக எதிர்க்கும் சோ போன்றவர்களோடு முதல்வர் கொண்டிருக்கும் நட்பு எத்தகையது என்பதை யாரும் அறியாமலும் இல்லை....மேலும் இப்போது ஈழ ஆதரவு என்ற உங்களின் குரலின் மூலம் நாதியற்று நின்ற தமிழினத்தின் வாக்குகளை எல்லாம் வசூலித்துதான் அரியணை ஏறினீர்கள் என்பதும் பச்சைப்பிளைக்கு கூடத் தெரியும்

காலம் இப்போது உங்கள் காலடியில் கால்பந்து போல பணிந்து  கிடக்கிறது முதல்வர் அவர்களே!!! உங்கள் கோட்டுக்குள் நிற்கிறது பந்து. 2016 வரையிலும் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நீங்கள் பந்தை அடித்து விளையாடுங்கள்....

2009 பாரளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தால் ஈழத்தில் போர் நிறுத்தப்படுவதோடு இந்தியாவிலும் ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகும் என்ற இந்திய கூட்டு மனோபவத்தின் படி ஒவ்வொரு தமிழர்களும் வாக்களித்து எங்களுக்கு நாங்களே வாக்கரிசி போட்டுக் கொண்டதின் விளைவு.....

எங்கள் பிள்ளைகளின் வெற்று உடம்புகளில் சிங்களக் காடையர்களின் துப்பாக்கிக் குண்டுகள் இறங்கின, எமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள், இராசாயன குண்டு வீசி பாதுகாப்புப் பகுதியிலேயே பாதுகாப்பாய் சமாதியாக்கப்பட்டன எமது உறவுகளின் உடல்கள், இறந்த உடல்களைப் புணர்ந்தும், புணர்ந்த உடல்களைப் படமெடுத்தும் வெளியிட்டு தனது கோரப்புத்தியை காட்டினான் ஈன சிங்களக் நாய்....

ஒரு விடுதலைப் போராட்டம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி நின்று இந்திய தேசத்தின் உதவியோடு மிதித்து நசுக்கி அழிக்கப்பட்டது. .......!!!!! இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே.....?!!!!  எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்...! ஆமாம்  அமைதியாய் நடந்த போரட்டத்தால் என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பயந்து இப்படியான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டீர்கள்....?

சமூகப் பிரச்சினைகளுக்கு மக்கள் போராடினால் அதுவும் மாணவர்கள் போராடினால்....பிறகு நாம் அரசியல் செய்ய இங்கு என்ன இருக்கிறது என்ற பயம் எல்லோரையும் போல உங்களுக்கும் வந்திருக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம். முத்துக்குமாரன்களும், செங்கொடிகளும் எரிந்து போயிருக்கலாம்....ஆனால் இனி தமிழ்  பிள்ளைகள் யாரும் தங்களை அவ்வளவு சீக்கிரம் கொளுத்திக் கொண்டு மாய்ந்து போய்விட மாட்டார்கள். 

எட்டு பேரின் உண்ணாவிரதத்தை அதிகாரம் கொண்டு தடுக்க முயன்றீர்கள்....இதோ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு இன்று..... 8 இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது, 27 என்பது 100 ஆகும்...100 லட்சமாகி கோடிகளில் நின்று கொண்டு புரட்சி முழக்கமிடும்....அப்போது என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம்...?


தேவா. S





Viewing all articles
Browse latest Browse all 254

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>