Quantcast
Channel: Warrior
Viewing all articles
Browse latest Browse all 254

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!

$
0
0

ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும்.

ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார்.

கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ரஜினி என்னும் சூப்பர் பவரும் ஒன்றாய் சேர்ந்ததின் விளைவுதான் இவ்வளவு கோலாகலத்துக்குமே காரணம். இன்றைக்கு நேற்று இல்லை 1991 ல் தளபதி வெளியாவதற்கு முன்பு இவ்வளவு தனியார் தொலைக்காட்சிகளும், இன்ன பிற சோசியல் மீடியாக்களும் இல்லாத காலத்திலேயே தளபதி அட்டகாசமான ட்ரெண்ட் ஆனது. தளபதி தொப்பி, தளபதி டிஷர்ட், தளபதி பேக்பேக்ஸ், தளபதி ஸ்டில்ஸ் அடங்கிய காலண்டர் என்று எல்லாமே விற்றுத் தீர்ந்தது. தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை என்றெல்லாம் ரசிகர்களால் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. ரஜினி எப்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத ஒரு மாஸ் என்பது இப்போது இங்கே சமூக பிரக்ஞை என்ற பெயரில் அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எதை மக்கள் ரசிக்கிறார்களோ எதை அதிகம் பேர் பார்ப்பார்களோ அதை பயன்படுத்தி பணம் சம்பாரிப்பது என்பது மார்கெட்டிங் யுத்தி. கமர்சியல் உலகத்தில் இதுவெல்லாம் சர்வசாதரணம், இந்தியா என்றில்லை எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்களை வைத்து பொருளீட்ட முடியும் என்று எந்த ஒரு நிறுவனமம் நினைக்கிறதோ அவர்கள் அப்போதைய ட்ரெண்ட்டை , கவர்ச்சியைக் கையிலெடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.

கபாலிதான் இப்போதைய ட்ரெண்ட் அதை வியாபரிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை இல்லை என்று அர்த்தம். இங்கே அடிப்படையில் மிகைப்பட்டவர்களுக்கு இருப்பது வயிற்றெரிச்சல், ஆழ்மனதின் பொறாமை அதனால்தான் அர்த்தமில்லாத கோரக் கேள்விகள் புரையோடிப்போன மனதிலிருந்து எழுகின்றது. அசிங்கமான அடிப்படை எண்ணம்தான் திருட்டுத்தனமாக இந்தபடம் வந்து யாரும் திரையரங்கிற்கு செல்லாமல் படம் தோல்வியடையவேண்டும் என்று எண்ண வைக்கிறது. பொறுக்கித்தனமான எச்சிக்களை புத்திதான் ப்ரிவியூ ஷோவில் உட்கார்ந்து கொண்டு மொபைலில் கபாலி ஓப்பனிங் காட்சியை எடுத்து இணையத்தில் வைரலாக்குகிறது. சென்னை வெள்ளத்தில் ரஜினி என்ன செய்தார் என்பது அப்போதே ஊடகங்களில் செய்தியாய் வெளிவந்தது. பத்துலட்சம்தானே கொடுத்தார் என்று கேள்வி கேட்கும் குரூர புத்திகள் தங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயைக் கூட கொடுக்க மனமில்லாதவைகள் என்பதோடு மட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தின் போது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் சென்றன என்பதை வேண்டுமென்றே மறைத்துக் கொண்டு பேசும் ஈனத்தனமும் கொண்டவை.

ஒரு சாதாரண கண்டக்டராய் இருந்து இன்றைக்கு தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாய் இருக்கும் ரஜினி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதராய் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க கொடுத்திருக்கும் உழைப்பும், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராய் ஆனபின்பும் இருக்கும் அவரது எளிமையும் இது எல்லாவற்றுக்கும் மேலாய் அவரின் அட்டகாசமான ஸ்டைலும் ஸ்பீடும்தான் ஒவ்வொரு ரசிகனையும் காந்தமாய் இன்னமும் அவரை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் புதிதல்ல பல காலகட்டங்களில் பல விதமான் சூழல்களை கடந்து வந்ததைப் போல இந்தச் சூழலையும் அவர்கள் எளிதாய் கடந்து வந்து விடுவார்கள். கபாலி ரஜினியின் படங்களில் கண்டிப்பாய் ஒரு மிகப்பெரிய மைல்கலாய் இருக்கும் என்பது வரப்போகும் வாரங்களில் எல்லோருக்கும் தெரியும்.



தேவா சுப்பையா...







Viewing all articles
Browse latest Browse all 254

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>